மஸ்ஜிதுல் முபாரக் கமிட்டி சார்பாக தொடர்ச்சியாக தெருமுனைப் பிரச்சாரம் நடந்து வருவது தாங்கள் அறிந்ததே. அதன் தொடர்ச்சியாக 25.12.2013 (புதன்கிழமை) அன்று கல்வத் நாயகம் தெரு கீழ வட்டாரத்தில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோதரர் பஷீர் அஹமத் உமரி அவர்கள் "நல்லுபதேசம்" என்ற தலைப்பிலும், சகோதரர் எஸ்.எஸ்.யு.ஸைபுல்லாஹ் ஹாஜா பைஜி அவர்கள் "இன்றைய சூழ்நிலையில் முஸ்லிம்கள் வாழ்வது எப்படி?" என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ். ஏராளமான பெண்கள் தங்களுடைய வீடுகளில் இருந்து மார்க்க விளக்க பயானைக் கேட்டு தெரிந்து கொண்டனர். இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து தெருமுனை பிரச்சாரம் நடைபெறும்.





0 comments:
Post a Comment