பஷீர் அஹமத் உமரி
1. ரமலான் மாதத்தின் சிறப்புகள் யாவை?
1. ரமலான் மாதம்- மனித சமுதாயத்திற்கு அருட்கொடையாகவும் மாபெரும் வழிகாட்டியாகவும் அமைந்த திருக்குர்ஆன் அருளப்பட்ட மாதம்.
ரமலான் மாதம் எத்தகையது என்றால் அம்மாதத்தில்தான் மனிதர்களுக்கு நேர்வழி காட்டக்கூடிய, நேர்வழியைத் தெளிவாகக் எடுத்துச் சொல்லக்கூடிய, (பொய்யை விட்டும் உண்மையைப்) பிரித்துக் காட்டக்கூடிய குர்ஆன் அருளப்பட்டது. எனவே அம்மாதத்தை யார் அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கட்டும். (அல்குர்ஆன் 2:185)
2. இம்மாதத்தில்தான் ஆயிரம் மாதங்களை விடச் சிறந்த லைலதுல் கத்ரு எனும் மகத்துவ மிக்க இரவு உள்ளது.
'மகத்துவமி;க்க இரவில் இதை நாம் அருளினோம். மகத்துமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது.' (அல்குர்ஆன் 97:1-3)
3. ரமலானின் ஒவ்வொரு இரவிலும் நரகத்திலிருந்து பலரை அல்லாஹ் விடுதலை செய்கிறான்.
4. இம்மாதத்தில் சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன. நரகத்தின் வாசல்கள் மூடப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்.
நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்: ரமலான் மாதத்தின் முதல் இரவு வந்து விட்டால் ஷைத்தான்களும் மூர்க்கத் தனமான ஜின்களும் விலங்கிடப்படுகின்றனர். நரகத்தின் வாசல்கள் மூடப்பட்டுவிடுகின்றன. அவற்றில் ஒரு வாசலும் திறக்கப்படுவதில்லை. சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன. அவற்றில் எந்த வாசலும் மூடப்படுவதில்லை. 'நன்மையைத் தேடுபவனே முன்னேறிவா! தீமையைத் தேடுபவனே நிறுத்திக் கொள்!' என்று அழைப்பாளர் ஒருவர் அழைக்கிறார். அல்லாஹ்வால் நரகத்திலிருந்து பலர் விடுவிக்கப்படுகின்றர். இவ்வாறு விடுவக்கப்படுவது (ரமலானின்) ஒவ்வொரு இரவிலுமாகும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி), நூல்: திர்மிதி 682, இப்னுமாஜா 1642
5. ரமலான் மாதம் பாவங்களைப் போக்குகின்ற மாதம்.
'நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் யார் ரமலானில் நோன்பு நோற்கிறாரோ அவரது முன்பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன' என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி), நூல்: புகாரி 38, முஸ்லிம் 760
6. ரமலானில் செய்கின்ற உம்ரா ஹஜ்ஜுக்குச் நிகரானது.
(புகாரி; 1782)
(தொடரும்....)
0 comments:
Post a Comment