بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)

தக்வா பள்ளிவாசல் மைதானத்தில் நோன்புப் பெருநாள் தொழுகை

        கடையநல்லூர் மஸ்ஜித் முபாரக் நிர்வாகக் கமிட்டி சார்பில் நோன்புப் பெருநாள் தொழுகை சிறப்பாக நடைபெற்றது. ரமலான் 30 நாள் முழுமையடைந்ததைத் தொடர்ந்து  மஸ்ஜித் முபாரக் நிர்வாகக் கமிட்டி சார்பாக கடையநல்லூரில் மூன்று இடங்களில் திட­ல் தொழுவதற்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இதில் காலை 6 மணி முதலே கடையநல்லூரைச் சார்ந்த இஸ்லாமியப் பெருமக்கள் ஆண்களும்பெண்களும்சிறுவர்களும் குளித்துவிட்டு ,  புத்தாடைகள்  அணிந்து ஆயிரக்கணக்கில் தொழுகைத் திடலை நோக்கி வரத்துவங்கினர். 

கடையநல்லூர் தக்வா பள்ளிவாசல் மைதானத்தில்  சரியாக  6.45 மணி அளவில் முஹிப்புல்லாஹ் உமரி அவர்கள் பெருநாள்  தொழுகையும் அதைத் தொடர்ந்து மக்களுக்கு குத்பா பேருரையும் நிகழ்த்தினார்கள். தமது உரையில் இஸ்லாம் கூறும் மனிதநேயத்தைப் பற்றி எடுத்துரைத்தார் . இஸ்லாமியப் பெருமக்கள் ஆர்வமுடன் பெரும் திரளாகக் கலந்து கொண்டு ஒருவருக் கொருவர் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மஸ்ஜித் முபாரக் கமிட்டி மற்றும் தக்வா பள்ளிவாசல் நிர்வாகிகள் சிறப்பாகச் செய்திருந்தனர்.



















Share on Google Plus

About மஸ்ஜித் முபாரக் ஜமாஅத்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment