ஆறு நோன்புகள்
ரமளான் மாதத்திற்கு அடுத்த மாதமான ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகள் நோற்பதற்கு நபிகள் (ஸல்) அவர்கள் ஆர்வமூட்டியுள்ளார்கள். யார் ரமலான் மாதம் நோன்பு நோற்று அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதம் ஆறு நோன்பு நோற்கிறாரோ அவர் காலமெல்லாம்நோன்பு நோற்றவராவார் என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ அய்யூப் (ரலி) நூல்: முஸ்லிம்
அதன் அடிப்படையில் கடையநல்லூரில் ஆறு நோன்பு நோற்கும் சகோதரர்களுக்கு, மஸ்ஜித் முபாரக் சார்பாக நோன்பு திறப்பதற்கு ( இஃப்தார் ) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆகவே ஆறு நோன்பு நோற்றிருக்கும் அனைத்து சகோதரர்களும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடம் அழைக்கிறோம்.
மஸ்ஜித் முபாரக்.
0 comments:
Post a Comment