بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)

அமீரக கடையநல்லூர் இஸ்லாமிக் தஃவா ( KNID ) ஆலோசனைக் கூட்டம்



ஏக இறைவனின் திருப்பெயரால்..
அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் கடந்த 15.07.2011 (வெள்ளி) அன்று மாலை 5.00 மணியளவில் அமீரக கடையநல்லூர் இஸ்லாமியக் தஃவாவின் முதல் ஆலோசனைக் கூட்டம் துபாய் டேய்ரா பகுதி கோட்டை பள்ளிக்கு அருகில் உள்ள தாருஸ்ஸலாம் ரூமில் வைத்து நடைபெற்றது.

முதலில் சகோ. ஷாகுல் அவர்கள் கடையநல்லூர் இஸ்லாமிக் தஃவாவின் நோக்கம் பற்றி விளக்கம் அளிக்கையில்கடையநல்லூர் இஸ்லாமிக் தஃவா என்பது மஸ்ஜித் முபாரக், மஸ்ஜித் ரஹ்மான் (சீனாப் பள்ளி), மஸ்ஜித் தக்வா, மஸ்ஜித் அக்ஸா ஆகியவையை மையமாக்க் கொண்டு கடையநல்லூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களில் இஸ்லாமிய மார்க்கப் பிரச்சாரம் செய்யும் ஒரு அமைப்பு ஆகும். இதன் முக்கிய நோக்கமாக இஸ்லாமிய மார்க்கப் பொதுக்கூட்டம், தெருமுனை பிரச்சாரம், பெண்களுக்கான மார்க்க நிகழ்ச்சிகள், கேள்வி பதில் நிகழ்ச்சிகளை நடத்துவது போன்றவையாகும்”  என்று விளக்கினார்.
அந்தக் கூட்டத்தில் எடுக்கப் பட்ட தீர்மாண்ங்கள்
*        கடையநல்லூர் இஸ்லாமிக் தஃவா விற்காக  அமீரகத்திலுள்ள கடையநல்லூர் தவ்ஹீத் சகோதரர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து அதற்குத் தேவையான பொருளாதாரத்தை அமீரகத்தில் திரட்டி தாயகத்திற்கு அனுப்பி வைப்பது என்று முடிவெடுக்கப்பட்டது.
*        கடையநல்லூரில் ஆண்களுக்கான இஸ்லாமிக் கல்லூரியை ஆரம்பிப்பது, இனையதளம் ஒன்றை ஆரம்பித்து அதன்மூலம் மார்க்கப் பிரச்சார வீடியோ உரை ஆடியோ உரை மற்றும் E-Book ஆகியவற்றின் மூலம் தஃவாப் பணிகளை செய்வது என்றும் அதற்காக இங்கிருந்து நாம் உதவிகளை செய்வது என்று தீர்மானிக்கப் பட்ட்து.
*        கடையநல்லூரில் மஸ்ஜித் முபாரக், சீனாப் பள்ளி, மஸ்ஜித் தக்வா ஆகிய மூன்ற பள்ளிகளுக்கும் நோன்புக் கஞ்சி மற்றும் இதரச் செலவிற்காக தினந்தோறும் ரூபாய் 6000 வரை செலவாகிறது. இதில் அனைத்துத் தரப்பு மக்களும் தங்களின் பங்களிப்பைச் செய்து அனைவரும் அல்லாஹ்விடம் கூலியைப் பெறவேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் குறைந்த பட்சமாக ஒரு நபருக்கு ரூபாய் 1500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பது சம்பந்தமாக விளக்கப்பட்டது. அதற்கான தொகை அமீரகத்தில் திர்ஹம் 130 என்றும் இதை நோன்பு ஆரம்பிக்கும் முன்னதாக விருப்பமுள்ளவர்கள் செலுத்தவேண்டும் என்றும் ஃபித்ரா தொகை 20 திர்ஹம் என்றும் அதை 15ஆம் நோன்புக்குள் செலுத்தவேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
பிறகு அதற்கான நிர்வாகிகள் ஏக மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன் விபரம் வருமாறு :

நிர்வாகிகள்

தலைவர் : சகோ. லத்தீஃப் (பேட்டை) மொபைல் 055 7656353
செயலாளர் : சகோ. ஸைபுல்லாஹ் மொபைல் எண் : 050 6679030
பொருளாளர் : சகோ. நூர் மொபைல் : 050 2013515
துணைத் தலைவர் சகோ. அஸ்காஃப் மொபைல் எண் : 005 8066035
துணைச் செயலாளர் அப்துல் காதர் மொபைல் : 055 7319339

நிர்வாகக் குழு உறுப்பினர்கள்

1.             சகோ. பீர் ஒலி
2.             சகோ. நத்ஹர் பாவா
3.             சகோ. பிர்தவ்ஸ்
4.             எஸ்.யூ.ஷாகுல்
5.             சகோ. ஹபீபுல்லாஹ்
6.             ஷாகுல் ஹமீது சேட்

பிறகு தாயகத்திலிருந்து சகோ. எஸ்.எஸ்.யூ.ஷைபுல்லாஹ் அவர்கள் கடையநல்லூரில் சகோ. அப்துல் ஜலீல் மதனீ மூலமாக வளர்க்கப்பட்ட ஏகத்துவப் பிரச்சாரம் மற்றும் கடந்து வந்த பாதைகள் பற்றியும், இதனை நாம் எவ்வாறு இன்னும் வீரியமாய் செய்வது என்பது பற்றியும் விளக்கினார்கள். மேலும் வந்திருந்த மக்கள் கேட்ட கேள்விகளுக்கும் பதிலளித்தார்கள்.
மேலும் இப்தார் மற்றும் ஃபித்ரா நன்கொடைகளை வசூலிக்க பகுதிவாரியாக நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


துபை
இன்டர்நேசனல் சிட்டி சகோ. அல் அமீன் மொபைல் எண் : 055/7624300

ஹோர் அல் அன்ஸ் சகோ. ஹபீபுல்லாஹ் மொபைல் எண் : 056/7283290

டேய்ரா பகுதி சகோ. பீர் ஒலி மொபைல் எண் : 050/6755276
சகோ. ஸைபுல்லாஹ் மொபைல் எண் : 050/6756670
ஷாகுல் ஹமீது சேட், மொபைல் எண் : 050/5250208

அல் கூஸ்  துராப்ஷா மொபைல் எண் : 055/4377279

சோனாப்பூர் : ஹனீஃபா மொபைல் எண் : 050/8821330

அபுதாபி
எஸ்.யூ.ஷாகுல் மொபைல் எண் : 055/6205561
முஹம்மதுஷா மொபைல் எண் : 055/9385536.

இறுதியாக துஆ வுடன் கூட்டம் இனிதே நிறவடைந்த்து அல்ஹம்துலில்லாஹ். 




































Share on Google Plus

About மஸ்ஜித் முபாரக் ஜமாஅத்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment