அல்லாஹ்வின் மகத்தான கிருபையால், 24.07. 2011 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணி முதல் 6 மணி வரை பெண்களுக்கான இஸ்லாமிய மார்க்க விளக்க நிகழ்ச்சி மஸ்ஜிதுல் முபாரக் வளாகத்தில் உள்ள நஜாஹ் நர்ஸரியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அவர்கள் சகோ. முஹிப்புல்லாஹ் உமரி அவர்கள் தலைமை தாங்கினார். சகோ. முஹம்மது கோரி அவர்கள் ”குழந்தை வளர்ப்பு” என்ற தலைப்பிலும் எஸ்.எஸ்.யூ.ஸைபுல்லாஹ் அவர்கள் ”நல்வழியில் செலவழிப்போம்” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
நிகழ்ச்சிக்குப் பின் கடந்த வாரத்தில் கேட்கப்பட்ட மார்க்க சம்பந்தமான கேள்விக்கு சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்டோர் சரியான விடையளித்திருந்தார்கள். அதில் குலுக்கல் முறையில் தேர்தெடுக்கப்பட்ட முதல் மூன்று பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.






0 comments:
Post a Comment