கடையநல்லூரில் சமீப நாட்களாக மர்மக் காய்ச்சல் பரவி வருகிறது, இதில் பல உயிர்கள் பலியாகியுள்ளன. இக் காய்ச்சல் ஒரு விதமான கொசுவின் மூலம் பரவுகிறது, இதில் பாதிக்கப் படுபவர்களின் இரத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் முற்றிலுமாக குறைந்து மரணத்தைத் தழுவும் நிலை ஏற்படுகிறது.
இதுகுறித்து சுகாதாரத்துறை சங்கரன்கோவில் துணை இயக்குனர் மற்றும் கடையநல்லூர் நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் நம் ஜமாஅத்தைச் சார்ந்த நிர்வாகிகள் தடுப்பு நடவடிக்கையை போர்க் கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொண்டனர், மேலும் இலவச மருத்துவ முகாம் ஏற்பாடு செய்ய வேண்டுமென்று கருதினால் அதை எங்கள் ஜமாஅத்தின் சார்பாக ஏற்படுத்தித் தர தயராக உள்ளோம் என்றும் கூறினர்.

0 comments:
Post a Comment