بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)

பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி


வல்ல ரஹ்மானின் பேரருளால், 02.11.2013 காலை 10.30 மணி முதல் லுஹர் வரை மஸ்ஜிதுல் முபாரக் முதல் தளத்தில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியின் முதல் அமர்வில் மவ்லவி எஸ்.ஏ.பஷீர் அஹமத் உமரீ அவர்கள் இன்றைய இளைஞர்களின் நிலை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

பின்னர் உரையாற்றிய மவ்லவி எஸ்.எஸ்.யு. ஸைபுல்லாஹ் ஹாஜா பைஜி அவர்கள் எதிர் காலங்களில் மாணவர்கள் நடந்து கொள்ளவேண்டிய முறைகளைக் கூறிவிட்டு அவர்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களுக்கும் பதிலளித்தார்கள்.
இந்நிகழ்ச்சியின் இரண்டாம் அமர்வு இஷா தொழுகைக்குப் பின்னரும் நடைபெற்றது. இதில் மாணவர்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களுக்கு விரிவான, தெளிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சி இரவு 9 மணிக்கு துஆவுடன் இனிதே நிறைவுற்றது.


















Share on Google Plus

About மஸ்ஜித் முபாரக் ஜமாஅத்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment