அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 08.07.2011 (வெள்ளிக்கிழமை) அன்று ரகுமாநியாபுரம் 2வது தெருவில் மாலை மஃரீப் தொழுகைக்குப் பிறகு தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. பிறகு உரை நிகழ்த்திய சகோ.எஸ்.எஸ்.யு.ஷைபுல்லாஹ் ஹாஜா அவர்கள் "வட்டி" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள், அதில் நமது சமுதாயம் வட்டி என்ற கொடுமையில் எந்த அளவிற்கு மூழ்கிக் கிடக்கிறார்கள் என்பதனையும் அதனால் மறுமையில் எப்பேற்பட்ட தண்டனைகளை சந்திக்க நேரிடும் என்பதனையும் குர்ஆன் ஹதீஸ் ஒளியில் விளக்கம் அளித்தார்கள்.
மேலும் மஸ்ஜித் முபாரக் - யின் மூலம் நடத்தப் படும் வட்டியில்லா கடன் திட்டம் பற்றியிம் விளக்கம் அளித்தார்கள். அதில் ஏராளமான ஆண்கள் கலந்து கொண்டதுடன் பெண்களும் தங்களது வீட்டில் இருந்து கேட்டு தெளிவடைந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.















0 comments:
Post a Comment